கோவை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த மேயர் கல்பனா ஆனந்தகுமார்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட பிள்ளையார்புரம் மற்றும் நாகராஜபுரம் பகுதியில் உள்ள மண் சாலையை ரூ.24.60 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல், ரூ.18.10 இலட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்தல், ரூ.16.20 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மின்கம்பங்களுடன் கூடிய தெரு விளக்குகள் அமைத்தல் மற்றும் கோண்டி நகர் பகுதியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக பொதுகழிப்பிடம் கட்டும் பணி, ரூ.8.68 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று (பிப்.9) பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் ர.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் சபரிராஜ் ஆகியோர் உள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...