மதுக்கரை அறிவொளி நகரில் நகைகளுக்கு அட்டை பெட்டிகள் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து

இன்று (பிப்.9) மதியம் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் உணவருந்த வெளியே வந்த நிலையில், கம்பெனிக்குள் திடீரென தீ பற்றி உள்ளது. இதனை அறிந்த தொழிலாளர்கள் அதனை அணைக்க முயன்ற போது தீ மளமளவென பரவியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.


கோவை: கோவை மதுக்கரை அறிவொளி நகர் பகுதியில் நகைகளுக்கு அட்டை பெட்டி தயாரிக்கும் தனியார் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 130க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.



இந்நிலையில் இன்று (பிப்.9) மதியம் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் உணவருந்த வெளியே வந்த நிலையில் கம்பெனிக்குள் தீ பற்றி உள்ளது.



இதனை அறிந்த தொழிலாளர்கள் அதனை அணைக்க முயன்ற போது தீ மளமளவென பரவியுள்ளது.

இதனால் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.



உடனடியாக கோவைப்புதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



மின் கசிவால் தீ பற்றியதாக கூறப்படும் நிலையில், உரிய விசாரணைக்குப் பிறகே தீ விபத்துக்கான காரணம் தெரியவரும். இந்த கம்பெனியை சுற்றி வேறு சில கம்பெனிகளும் இருப்பதால் அவர்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.



இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த வண்ணம் உள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...