குன்னூர் நகரின் முக்கிய பகுதியில் 17 சிசிடிவி கேமிராக்களை குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்


குன்னூர் நகர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ரூ.4,50,000 செலவில் நகரின் சந்தையில் முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 17 சி.சி.டி.வி கேமராக்களை குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு திறந்து வைத்தார். இந்நிகழ்வில், காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், குன்னூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழ், குன்னூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன் பேசுகையில், தற்போது பொருத்தப்பட்டுள்ள இந்த கேமிராக்கல் மூலம் வியாபாரிகள் குற்றங்களை தடுத்து மிகவும் நிம்மதியாக தங்கள் வியாபாரத்தில் கவனம் செலுத்த முடியும் என்று கூறினார்.

மேலும், அவர் கூறுகையில், ஏற்கனவே குன்னூர் வியாபாரிகள் சங்கத்தின் இலவச சேவை பிரிவின் மூலம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வகையில் தாங்கள் தவற விட்ட பொருட்களை கண்டுபிடுத்து கொடுக்கப்பட்டு உதவி வந்தது. இப்போது இந்த தொழில்நுட்ப சேவையின் மூலம் இன்னும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

இது காவல் துறையினருக்கும் குற்றங்களை தடுப்பதிர் மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.

மேலும், இந்த சேவையின் மூலம் செல்போனிலேயே காவல் துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழ், நகரத்தில் நடப்பதை எங்கிருந்து வேண்டாலும் பார்க்கும் வகையில் இந்த சேவை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....