கோவை வடவள்ளி இளைஞர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவு

ஆபாசம் படம் பார்ப்பதாகக் கூறி பலரை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்த புகாரில், சபரி என்பவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து, அதன் நகல் சிறையில் உள்ள சபரியிடம் நேற்று (பிப்.7) புதன்கிழமை வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் ஆபாசம் படம் பார்ப்பதாகக் கூறி பலரை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வருவதாக மாநகர சைபா் குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சைபா் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், கோவை வடவள்ளியைச் சோ்ந்த சபரி (23) உள்ளிட்ட 10 போ், சைபா் குற்றப் பிரிவு போலீஸார் என்றும், ஆபாச படம் பார்த்ததுக்கு வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க பணம் தர வேண்டும் என்றுகூறி பலரையும் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து சபரி உள்ளிட்ட 10 பேரையும் போலீஸார் அண்மையில் கைது செய்தனா். இந்தக் கும்பலுக்கு தலைமையாக சபரி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இந்நிலையில், சபரி மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையருக்கு சைபா் குற்றப் பிரிவு போலீஸார் பரிந்துரை செய்தனா்.

இதைத் தொடா்ந்து சபரி மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து, அதன் நகல் சிறையில் உள்ள சபரியிடம் நேற்று (பிப்.7) புதன்கிழமை வழங்கப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...