சாலையோர வியாபாரிகள் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் வழியாக முதலமைச்சருக்கு விண்ணப்பம்

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல், சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் திட்டத்தை மாவட்டம் முழுவதும் அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட தெரு வியாபாரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் வழியாக தமிழக முதலமைச்சருக்கு விண்ணப்பம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில்,குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1. 2015ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல், சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் திட்டம் அரசிதழில் வெளியிட்டு 02.11.2015 முதல் அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகங்களால் முறையாக அமல்படுத்தப்படவில்லை. மாவட்டம் முழுவதும் இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

2. மாநிலம் முழுவதும் தெரு வியாபாரிகள் அனைவருக்கும் வியாபாரச் சான்று மற்றும் ஸ்மார்ட் கார்டு, அடையாள அட்டை காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் வழங்க வேண்டும்.

3. அடையாள அட்டை முழுமையாக வழங்கப்பட்டு வணிகக் தேர்தல் நடத்திட வேண்டுவதுடன் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதை உறுதிப்படுத்தி வணிகக் குழுவை முறையாக செயல்படுத்த வேண்டுகிறோம்.

4. வணிகக்குழுவிற்கு அலுவலகம் ஒதுக்கீடு செய்திடவும். பணியாளர்கள் ஒதுக்கீடு செய்து அலுவலகம் முறையாக செயல்பட வேண்டுகிறோம்.

5. தெரு வியாபாரிகளிடம் வணிக கட்டணம் வசூலிக்க டெண்டர் விடுவதை கைவிட வேண்டுவதுடன், திட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள வணிக கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டுகிறோம்.

6. வணிகக்குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டுகிறோம்.

7. தெரு வியாபாரிகள் அனைவருக்கும் வங்கி மூலம் கடன் வழங்கவும் தொழிற்சங்க ஒத்துழைப்புடன் முறையாக திரும்ப செலுத்துவதற்கான பெரும் திட்டம் கொண்டு வந்து அனைத்து தெருவோர வியாபாரிகளுக்கும் பயனடையும் விதத்தில் செயல்படுத்த வேண்டுகிறோம்.

8. தெரு வியாபார பொருட்களை இரவில் பாதுகாப்புடன் வைப்பதற்கான இட வசதி செய்து தர வேண்டுகிறோம்.

9. உள்ளாட்சிப் பகுதிகள் அனைத்திலும் இந்தத் திட்டம் அமல்படுத்த வேண்டும். ஆனால், கிராம ஊராட்சி, பெரும்பாலான பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே. அனைத்து கிராம ஊராட்சி, பேரூராட்சிகளில் இதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...