கௌசிகா நீர்கரங்கள் சார்பில் குன்னத்தூர் குளம் சீரமைக்கும் பணிகள் துவக்கம்

கோவையை சேர்ந்த பிரபல தொழில் நிறுவனமான ப்ரொபெல் இண்டஸ்ட்ரீஸ் குன்னத்தூர் குளத்தை சீரமைக்க சுமார் மூன்று இலட்சம் ரூபாய் நிதி பங்களிப்பு வழங்கியுள்ளது. கோவை ராக் பொதுநல அமைப்புடன் இணைந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அமைப்பினர் நேற்று (பிப்.4) காலை பூஜையுடன் பணிகளை துவங்கினர்.


கோவை: கோவை அன்னூர் தாலுக்காவுக்கு உட்பட்ட குன்னத்தூர் பகுதியில் உள்ள சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட குன்னத்தூர் குளம் வருவாய்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இந்த குளம் தற்பொழுது புதர்மண்டி குப்பைக்கழிவுகள் மிகுந்து காணப்படும் இந்த குளத்தை சீரமைக்க கௌசிகா நீர்கரங்கள் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் அப்பகுதி மக்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து குன்னத்தூர் குளம் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கி தொடர்ந்து வாரந்தோறும் களப்பணிகள் மேற்கொண்டு சுத்தம் செய்து வந்த நிலையில், சமீபத்திய பருவமழைக்கு நீர்வழிப்பாதைகள் மூலம் குட்டையின் ஒருபகுதி நீர் நிறைந்தது.

இந்நிலையில் தற்போது கோவையை சேர்ந்த பிரபல தொழில் நிறுவனமான ப்ரொபெல் இண்டஸ்ட்ரீஸ் இந்த குளத்தை சீரமைக்க சுமார் மூன்று இலட்சம் ரூபாய் நிதி பங்களிப்பு வழங்கியுள்ளனர். கோவை ராக் பொதுநல அமைப்புடன் இணைந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அமைப்பு நேற்று (பிப்.4) காலை பூஜையுடன் பணிகள் துவக்கப்பட்டது. ப்ரொபெல் நிறுவனத்தின் சார்பில் விக்னேஷ், குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கௌசிகா நீர்க்கரங்கள் அமைப்பு உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல்,கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் நேற்று (4.2.2024) குறிச்சி குளம் பகுதியில் களப்பணியில் ஈடுபட்டனர். அதன்படி குறிச்சி குளம் உபரிநீர் வாய்க்காலின் இரு புறங்களிலும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் நட்ட 1500 மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இதில் அவர்கள் குறிப்பாக கவாத்து செய்தல், கலைச் செடிகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...