கோவையில் கையில் குப்பையுடன் அதிமுக கவுன்சிலர்கள் நூதன போராட்டம்

கோவை மாநகரில் சேரும் குப்பைகளை அகற்ற தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று அதிமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். னசரி அகற்ற படாத குப்பைகளுக்கு எதற்கு குப்பை வரி செலுத்தவேண்டும் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.


கோவை: கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. நிகழ்வு நடைபெறும் வளாகத்திற்கு வெளியே அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஷர்மிளா, ரமேஷ் மற்றும் பிரபாகரன் ஆகியோர் கையில் குப்பையுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அவர்கள், கோவை மாநகரில் சேரும் குப்பைகளை அகற்ற தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என கையில் நோட்டீஸ் வைத்து வெளியே நின்றனர். தினசரி அகற்ற படாத குப்பைகளுக்கு எதற்கு குப்பை வரி செலுத்தவேண்டும் எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றத்தால் போத்தனூர், உக்கடம், குடியமுத்தூர், மதுக்கரை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை பற்றி நினைவூட்டி, அதை விரைந்து சரி செய்யவேண்டி போராடினர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...