கோவையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் – மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவு

காரமடை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ராமமூா்த்தி, தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அதிகாரியாகப் பணியாற்றி வந்த ஜெயகுமார், எஸ்.எஸ்.குளம் வட்டார வளா்ச்சி அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.


கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த வட்டார வளா்ச்சி அலுவலா்களை நேற்று (பிப்.4) பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காரமடை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ராமமூா்த்தி, தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அதிகாரியாகப் பணியாற்றி வந்த ஜெயகுமார், எஸ்.எஸ்.குளம் வட்டார வளா்ச்சி அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

எஸ்.எஸ்.குளம் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த தனலட்சுமி, கோவை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை வட்டார வளா்ச்சி அலுவலராகவும், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக (நிர்வாகம்) பணியாற்றி வந்த மகேஷ்வரி, காரமடை வட்டார வளா்ச்சி அலுவலராகவும், சூலூா் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த சிவகாமி, ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோல, சுல்தான்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ரேவதி, சூலூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், கிணத்துக்கடவு வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த சிக்கந்தா் பாட்ஷா சுல்தான்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...