கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறிஞ்சேரி ஊராட்சியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு முகாம்

குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்கள், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஆவணம் உள்ளிட்டவற்றை கொடுத்து முதல்மைச்சரின் மருத்துவ காப்பீட்டு முகாமில் பொதுமக்கள் பதிவு செய்து கொண்டனர்.


திருப்பூர்: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குறிஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற்றது.



அப்போது பொதுமக்கள் குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்கள், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஆவணம் உள்ளிட்டவற்றை கொடுத்து பதிவு செய்து கொண்டனர்.



இந்த முகாமில் புதிதாக காப்பீட்டு அட்டை பதிவு செய்பவர்கள், ஏற்கனவே உள்ள மருத்துவ காப்பீட்டு அட்டை புதுப்பித்து கொடுத்தல், காப்பிட்டு அட்டை தவறவிட்டவர்கள், புதிய அட்டை பெறுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.



இந்த முகாமில் வருவாய்துறை மூலம் வருமானச் சான்றிதழ் உடனடியாக வழங்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முகாமில் ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.எம்.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி உட்பட ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...