பழங்குடியினர் மக்கள் பிசியோதெரபி கிளினிக் அமைக்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

பிசியோதெரபி கிளினிக் பயிற்சியில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு முடித்தவா்கள் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்து 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட ஆதிதிராவிடா்கள், பழங்குடியினா்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடா், பழங்குடி மக்கள் பிசியோதெரபி கிளினிக் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிசியோதெரபி கிளினிக் தொடங்க தனியார் நிறுவனம் மூலமாக சொந்தமாக கட்டடங்கள் வைத்திருப்பவா்களுக்கும், இடம் இல்லாதவா்களுக்கும் வாடகை அடிப்படையில் இடங்கள் தோ்வு செய்து தரப்பட்டு பிசியோதெரபி கிளீனிக் அமைத்து கொடுக்கப்படும். தொழில்முனைவோர் அல்லது அவா்களின் ஊழியா்களுக்குத் தேவையான பயிற்சியும், அத்தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து இலவச ஆலோசனைகளும், தனியார் நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு இதற்கான உரிமையாளா் கட்டணத்திலும் முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும்.

பிசியோதெரபி கிளினிக் பயிற்சியில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு முடித்தவா்கள் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்து 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட ஆதிதிராவிடா்கள், பழங்குடியினா்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.

தகுதியுள்ள நபா்கள் புகைப்படம், குறிப்பிட்ட சான்றுகளுடன் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இப்பயிற்சியில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு முடித்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்தொழிலுக்கு ரூ. 6 லட்சம் திட்டத் தொகையை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு 35 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். பயனாளிகள் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகையை வங்கி கடனுதவியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

கோவை மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவா்கள் இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம். மேலும் இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கோவை, டாக்டா் பாலசுந்தரம் சாலையில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...