கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இணையவழி பட்டப் படிப்பில் சேர்க்கை தொடக்கம்

இணையவழியில் பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், தொழில் வழிகாட்டுதல், எம்.காம். வணிகவியல், நிதி-கணக்கியல், எம்.சி.ஏ. போன்ற 11 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுவதாக பாரதியார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் இணையவழியில் நடத்தும் பட்டப் படிப்புகளில் சேர மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது, பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் தொலைநிலைக் கல்வித் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் இணையவழியில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்த பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அனுமதி பெறப்பட்டு, சிறப்பாக நடத்தப்படுகிறது. அதன்படி, பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், தொழில் வழிகாட்டுதல், எம்.காம். வணிகவியல், நிதி-கணக்கியல், எம்.சி.ஏ. போன்ற 11 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் பிப்ரவரி 2024 அமா்வுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது. இணையவழியில் நடத்தப்படும் அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் விண்ணப்பம் பதிவு செய்தல், கல்விக் கட்டணம், பாடம் நடத்துவது, தோ்வு, சான்றிதழ் வழங்குவது என அனைத்தும் இணையவழியிலேயே நடைபெறும். இந்த நிலையில் இணையவழி படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் பல்கலைக்கழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...