பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் திமுக பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா

பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, மண்டல அளவிலான மாபெரும் பேச்சுப் போட்டி, கலைத்திறன் போட்டி, கலைஞர் கொண்டாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


கோவை: திமுக பொறியாளர் அணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, மண்டல அளவிலான மாபெரும் பேச்சுப் போட்டி, கலைத்திறன் போட்டி, கலைஞர் கொண்டாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநில பொறியாளர் அணி செயலாளர் கருணா முன்னிலை வகித்தார். இதில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.



இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை திறனை மேம்படுத்தும் விதத்தில் நடனம் மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றன. பேச்சுப் போட்டியில் பேசிய சரண்யா என்ற மாணவி, கலைஞர் என்பவர் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று சொன்னால் அது மிகையாகாது. சிந்தனையாலும், நிர்வாகத் திறமைகளும், எளிய மனிதருக்கும் தன் கொண்ட மானுட பற்றால் கொண்ட கொள்கையால் திட்டங்கள் தீட்டி தமிழகத்தின் முகத்தை மாற்றி அமைத்தவர் ஒரே தலைவர் கலைஞர் என்றார் .

இதனை தொடர்ந்து பேசிய ரமேஷ் என்ற மாணவன், எட்டாம் வகுப்பு படிக்கும் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் கொண்டு வந்து பெண்கள் அனைவரையும் படிக்க வைத்து பெண் சமுதாயத்தை மேலோக்கியவர் கலைஞர் என்றார். இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...