பொள்ளாச்சியில் மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபடுவோம் என்றும், முடி திருத்தும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்களின் உரிமையை மீட்டெடுக்க பாடுபவோம் என்றும் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் பொள்ளாச்சி தாலுகா வங்கி ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.



கோவை மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



மாநில தலைவர் ரமேஷ் ஐயா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.



தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் பாடுபடும், முடி திருத்தும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏனைய தொழில் புரிபவர்களின் உரிமையை மீட்டெடுக்கவும் அரசிடமிருந்து சலுகைகள் பெற்றுத் தரவும் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் பாடுபடும், தமிழகத்தில் ஜாதி வாரிய கணக்கெடுப்பை நடத்தி உள் இட ஒதுக்கீடு 5 சதவீதம் வழங்க வேண்டும், மருத்துவ சமூக மக்களைப் பிற சமூக மக்கள் வன்கொடுமை தாக்குதல், கொலை செய்தல் மற்றும் பெண்களை இழிவு படுத்துதல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், திரைப்படங்களில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...