நில அளவை தகவல்கள் பற்றி அறிய தமிழ் நிலம் மொபைல் செயலி - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், நில அளவை தொடர்பான விபரங்களை, 'தமிழ்நிலம்' செயலி மற்றும் இணைய தளம் மூலம் பார்வையிடலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (ஜன.31) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை, www.tnlandsurvey.tn.gov.in என்ற இணைய தளத்தை, NIC மூலம் உருவாக்கியுள்ளது. இந்த இணைய தளத்துடன் 'தமிழ் நிலம்' என்கிற மொபைல் செயலி இணைக்கப்பட்டிருக்கிறது.

இதில் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், பட்டா மாறுதல் கோரி விண்ணப்பம் செய்வதற்கான, இணைய வழி சேவை தமிழ் நிலம் Citizen Portal https://tamilnilam.tn.gov.in/citizen/ இணைய தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உட்பிரிவு மற்றும் உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை, உடனுக்குடன் செயல்படுத்த, தமிழ்நிலம் - ஊரகம் மற்றும் தமிழ்நிலம் - நகரம் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இதைத்தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர ஏதுவாக, மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பட்டா, சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க 'அ' பதிவேடு, அரசு புறம்போக்கு நில விபரம், புலப்படம், நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட, பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விபரங்களை எங்கிருந்தாலும் அறியும் வகையில், www.eservices.tn.gov.in என்ற இணைய தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப் பட்டியல்கள் விபரங்கள் போன்றவை பதிவிறக்கம் செய்ய, வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சி, நகராட்சிகளின் விபரங்கள், இத்துறையின் சுற்றறிக்கைகள், அரசாணைகள் மற்றும் பரப்பளவு போன்றவற்றை அறியலாம்.

மேலும் பொதுமக்கள் நில அளவை தொடர்பான விபரங்களை, 'தமிழ்நிலம்' செயலி மற்றும் இணைய தளம் மூலம் பார்வையிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...