கோவை மாநகராட்சி குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பா ஜ க-வினர் உண்ணாவிரத போராட்டம்

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி, போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள குப்பை கிடங்கு அருகே பா ஜ க இளைஞரணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது, இக்குப்பை கிடங்கில் குப்பைகள் முறையாக தரம் பிரித்து மறு சுழற்சிக்கு உட்படுத்துவது இல்லை எனவும், குப்பைகளை மண் கொட்டி மூடப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் குப்பை கிடங்கினால் சுற்றுவட்டார பொதுமக்கள் அடிக்கடி நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுவதாகவும், குப்பை கிடங்கில் அதிகளவில் ஊழல் நடைபெறுவதாகவும் கூறிய அவர்கள், குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படுமென தெரிவித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....