பொள்ளாச்சியில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு 74 அடி உயர கொடி கம்பத்தில் தேசிய கொடியேற்றம்

சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள், தலைவர்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காந்தியடிகள், நேரு, வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன், ஜான்சி ராணி லட்சுமி பாய் உட்பட 90 சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: நாட்டின் 75 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் 9வது வார்டுக்கு உட்பட்ட சுப்பையா நகர் மைதானத்தில் 75 ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு 74 அடி உயரம் கொடிக்கம்பம் நடப்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது.

மேலும் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகர திமுக செயலாளர் நவநீதி கிருஷ்ணன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மூவர்ண பலூன்களை வானில் பறக்க விடப்பட்டனர். அதனை தொடர்ந்து சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள், தலைவர்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காந்தியடிகள், நேரு, வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன், ஜான்சி ராணி லட்சுமி பாய் உள்ளிட்ட 90 சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...