தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு சிவன்மலை முருகன் கோவிலில் இன்று மாலை தேரோட்டம்

சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு மகா அபிஷேகத்திற்கு பிறகு காலை 7.30 மணிக்கு மகர புஷ்ய நல்வேளையில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள முருகன் கோயில் தைப்பூச தேர்த் திரு விழாவில் இன்று மாலை தேரோட்டம் நடைபெறவுள்ளது. சுப்பிரமணியர் ரதத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிவன்மலை சுப்ரமணியசாமி கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா மலை அடிவராத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் கடந்த 17-ம் தேதி தொடங்கியது.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு மகா அபிஷேகத்திற்கு பிறகு காலை 7.30 மணிக்கு மகர புஷ்ய நல்வேளையில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.



இன்று மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி துவங்குகிறது. தை பூசம் தேர் திருவிழாவின் ஏற்பாடுகளை, இந்தசமய அறநிலையத்துறையினர் செய்துவருகின்றனர். ஏராளமானம் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுக்க ஆவலுடன் உள்ளனர். இந்த மூன்று நாட்களும் அன்னதானம், பக்தி சொற்பொழிவு, கம்பத்தட்டம், வள்ளி கும்மி ஆட்டம் நிகழ்சிகள் நடைபெறுகிறது.

பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள். திருத்தேர் 3 தினங்கள் மலையை வலம் வந்து, ஞாயிறுக்கிழமை தேர்நிலை அடைகிறது. மேலும் தமிழகம் முழுவதிலுமே நேற்று தைப்பூசவிழா துவங்கிய நிலையில் சிவன்மலையில் மட்டுமே இன்று துவங்குகின்றது என்பது கூடுதல் சிறப்பு.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...