அசோகபுரம் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் காங்கிரட் சாலை மற்றும் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

11வது வார்டு ரங்கம்மாள் காலனி விநாயகர் கோவில் முன்புறம் சுமார் 9 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினை, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள அசோகபுரம் ஊராட்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் நிதியில் இருந்து 11வது வார்டு ரங்கம்மாள் காலனி விநாயகர் கோவில் முன்புறம் சுமார் 9 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அதேபோல சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 19 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 4வது வார்டு ஸ்டேட் பேங்க் காலனி 2 வீலர் ஒர்க் ஷாப் முதல் நாயர் ஸ்கூல் வழியாக ராக்கிபாளையம் மெயின் ரோடு தார்சாலை அமைப்பதற்கான பணிகளையும் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதற்கு பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய சேர்மன் நர்மதா துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், அசோகபுரம் ஊராட்சித்தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் ஆடிட்டர் சண்முகசுந்தரம், ஒன்றிய முன்னாள் சேர்மன் கோவனூர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் ஜெயபிரியா சக்கையன், பிரேமா, சங்கீதா, ஸ்ரீராம், சுதாகர், பார்த்திபன், ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர். மேலும் ஸ்டேட் பேங்க் காலனி விநாயகர் கோவிலில் நடைபெற்ற தைப்பூச பூஜையில் கலந்துக்கொண்டு அனைவரும் சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...