அசோகபுரம் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் காங்கிரட் சாலை மற்றும் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

11வது வார்டு ரங்கம்மாள் காலனி விநாயகர் கோவில் முன்புறம் சுமார் 9 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினை, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள அசோகபுரம் ஊராட்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் நிதியில் இருந்து 11வது வார்டு ரங்கம்மாள் காலனி விநாயகர் கோவில் முன்புறம் சுமார் 9 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அதேபோல சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 19 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 4வது வார்டு ஸ்டேட் பேங்க் காலனி 2 வீலர் ஒர்க் ஷாப் முதல் நாயர் ஸ்கூல் வழியாக ராக்கிபாளையம் மெயின் ரோடு தார்சாலை அமைப்பதற்கான பணிகளையும் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதற்கு பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய சேர்மன் நர்மதா துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், அசோகபுரம் ஊராட்சித்தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் ஆடிட்டர் சண்முகசுந்தரம், ஒன்றிய முன்னாள் சேர்மன் கோவனூர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் ஜெயபிரியா சக்கையன், பிரேமா, சங்கீதா, ஸ்ரீராம், சுதாகர், பார்த்திபன், ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர். மேலும் ஸ்டேட் பேங்க் காலனி விநாயகர் கோவிலில் நடைபெற்ற தைப்பூச பூஜையில் கலந்துக்கொண்டு அனைவரும் சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...