அடிப்படை வசதிகள் கேட்டு கொளத்துப்பாளையம் பேரூராட்சி 14 வது வார்டு உறுப்பினர் பொதுமக்களுடன் ஆர்ப்பாட்டம்

14-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர், கரூர் மெயின்ரோடு, செட்டியார் தோட்டம், குலுக்குபாளையம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை என பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் 18-வார்டுகள் உள்ளன. தி.மு.க கூட்டணி வார்டு உறுப்பினர்கள் 16-பேர், அ.தி.மு.கவில் ஒருவர் பாஜகவில். ஒருவர் உள்ளனர். திமுகவை சேர்ந்த சுதா பேரூராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.

இந்த நிலையில் 14-வது வார்டு உறுப்பினர் கார்த்திகேயன் பாஜக கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் 14-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர், கரூர் மெயின்ரோடு, செட்டியார் தோட்டம், குலுக்குபாளையம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், தார் சாலை, தெருவிளக்கு, கழிவறை வசதி, குப்பை அகற்றுவது உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் திருமலை குமார் மற்றும் தலைவர் சுதா ஆகியோர் செய்து தரவில்லை என கோரி பாஜகவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து தாராபுரம் கரூர் மெயின் சாலையில் உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 14-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தலைவர் மற்றும் செயலாளரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்திருந்தோம். ஆனால் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் எந்த ஒரு அடிப்படை வசதியும் பொது மக்களுக்கு செய்து தரவில்லை. இதனால் 400-குடும்பங்களைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும் என தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

பாஜகவை சேர்ந்த உறுப்பினர் என்பதால் தன்னுடைய கோரிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்றுவதில்லை. இதனாள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது பேரூராட்சி செயலாளரிடம் மனு கொடுத்துள்ளோம். மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி செயலாளர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்று அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக 14-ஆவது வார்டு பாஜக உறுப்பினர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...