தாராபுரத்தில் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டு

மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மாநிலம் அளவிலான பொறியியல் மாணவர்களுக்கான பேச்சு போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தி.மு.க தெற்கு மாவட்டம் பொறியாளர் அணி சார்பில் நடந்த, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் பதக்கங்களை நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் வழங்கினார்.

மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மாநிலம் அளவிலான பொறியியல் மாணவர்களுக்கான பேச்சு போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தொழில்நுட்ப கல்விக்கு தோள் கொடுத்த கலைஞர் உள்பட

6-தலைப்புகளில் பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் நடைபெற்றது.

பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த கல்லூரி மாணவி உள்பட 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் முதல் பரிசு தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



இதேபோல் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற பல்வேறு தாலுகாவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பதக்கம், ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் காங்கேயம், உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், மூலனூர், குண்டடம் பகுதியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.06.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...