ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திமுக ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த தொழிலாளர் நல வாரியம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இந்திய கம்யூனிஸ்ட் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக கலைஞர் கொண்டு வந்த விவசாயத் தொழிலாளர் நலவாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி தலைமையில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஒன்றிய அரசை கண்டித்தும் மற்றும் தி.மு.க அரசு கலைஞர் கொண்டு வந்த தொழிலாளர் நல வாரியம் அமைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



விவசாயத் தொழிலாளர்களுக்கு தற்போது உள்ள உழவர் பாதுகாப்பு திட்டத்தை ரத்து செய்து 1996-2001ஆம் ஆண்டு முடிய இருந்த கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அமைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், மகாத்மா காந்தி வேலையுறுதியளிப்பு திட்டத்தில் (MGNREGA) வேலை செய்த தொழிலாளர்களுக்கு நிலவையில் உள்ள கோரிக்கையை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...