ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திமுக ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த தொழிலாளர் நல வாரியம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இந்திய கம்யூனிஸ்ட் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக கலைஞர் கொண்டு வந்த விவசாயத் தொழிலாளர் நலவாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி தலைமையில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஒன்றிய அரசை கண்டித்தும் மற்றும் தி.மு.க அரசு கலைஞர் கொண்டு வந்த தொழிலாளர் நல வாரியம் அமைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



விவசாயத் தொழிலாளர்களுக்கு தற்போது உள்ள உழவர் பாதுகாப்பு திட்டத்தை ரத்து செய்து 1996-2001ஆம் ஆண்டு முடிய இருந்த கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அமைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், மகாத்மா காந்தி வேலையுறுதியளிப்பு திட்டத்தில் (MGNREGA) வேலை செய்த தொழிலாளர்களுக்கு நிலவையில் உள்ள கோரிக்கையை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...