கிரீன் பீல்டு பகுதியில் யானைகள் கூட்டம் உலா - தகர செட்டுகளை உடைத்ததால் மக்கள் அச்சம்

துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ்3, டி.கே.ஜி.நகர், ரேணுகா புரம், கிரீன் பீல்டு உள்ளிட்ட நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் உணவு தேடி காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து அங்குள்ள வாழைமரம், தென்னை மரம், செடி, கொடிகளை தின்றுவிட்டுச் செல்கின்றன.


கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ஆனைகட்டி மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளான, மாங்கரை, தடாகம், வீரபாண்டி, பன்னிமடை, கதிர்நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வருகின்றன. மேலும் அருகில் உள்ள தோட்டங்களில் புகுந்து தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதன் காரணமாக இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.



இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3, டி.கே.ஜி.நகர், ரேணுகா புரம், கிரீன் பீல்டு உள்ளிட்ட நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் உணவு தேடி காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து அங்குள்ள வாழைமரம், தென்னை மரம், செடி, கொடிகளை தின்றுவிட்டுச் செல்கின்றன.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக கிரீன் பீல்டு பகுதியில் யானை கூட்டம் உலா வந்ருகின்றன. இதில் நேற்று இரவு வந்த 3 யானைகள் கொண்ட காட்டு யானைக் கூட்டம் அங்கு கட்டடப் பணியாளர்கள் தங்கியிருந்த தகர செட்டுகளை உடைத்தெந்தது. அப்போது அருகில் இருந்தவர்கள் சத்தம் போடவே அதில் குழந்தைகளுடன் தங்கியிருந்தவர்கள் உயிருக்கு பயந்து தப்பி ஓடி உயிர் தப்பினர்.

இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...