ஐந்தாவது வாரமாக கோவை மாநகராட்சியின் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறுமா என்று மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் நிர்வாக காரணத்தால், குறை தீர்க்கும் நாள் கூட்டம் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நாளையும் நடைபெறாது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பொது பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

கடைசியாக 2023-டிசம்பர் 12ம் தேதி இந்த கூட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து வந்த 4 செவ்வாய்க்கிழமைகளில் (19.12.23, 26.12.23, 2.01.24, 9.01.24) இந்த கூட்டம் நிர்வாக காரணங்களால் நடைபெறவில்லை. அதன் பின்னர் 15.1.2024 பொங்கல் பண்டிகை என்பதால் அரசு விடுமுறை அன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை (23.1.24) இந்த கூட்டம் நடைபெறுமா என்று மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் நிர்வாக காரணத்தால் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நாளையும் நடைபெறாது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விடுமுறை தவிர்த்து பார்த்தல் தொடர்ந்து 5 வாரமாக இந்த கூட்டங்கள் நடைபெறாமல் உள்ளது. வழக்கமாக இந்த கூட்டங்களை மேயர் கல்பனா தலைமை தங்குவார். அவர் இல்லையென்றால், துணை மேயர் வெற்றி செல்வன் தலைமை தங்குவார். அவரும் இல்லாத சமயங்களில் மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர்கள் இந்த கூட்டத்தில் மக்கள் குறைகளை கேட்பார்கள். ஆனால் தொடர்ந்து 5 முறை கூட்டம் நடைபெறாமல் உள்ளது புதிதாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் குறைந்தது சுமார் 30 கோரிக்கை மனுக்களாவது மக்களிடம் இருந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...