அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, உடுமலையில் நகர பாஜக சார்பில் கோவில்களில் சிறப்பு வழிபாடு

உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விநாயகர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஐஸ்வர்யா நகர் கற்பக விநாயகர் மற்றும் செளதாம்லேஅவுட், அண்ணா குடியிருப்பு விநாயகர் கோவில், ஏரி பாளையம் தங்காதம்மாள் கோவில், தில்லை நகர் பாபா கோவில்களில் இன்று அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு விநாயகர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

இதே போல உழவர் சந்தை முன்பு 2000 பேருக்கு சாம்பார் சாதம் மற்றும் சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது. உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமரகுரு, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா, மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளர் வித்யா, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, நகர துணைத்தலைவர் கணேஷ் ஆனந்த், கண்ணப்பன், உமாகுப்புசாமி, நகர செயலாளர் செல்வராஜ், மத்திய நலத்திட்ட பிரிவு நகரத் தலைவர் திருஞானம், மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் குருசாமி, விளையாட்டு துறை நகர தலைவர் வைர பிரகாஷ், உடுமலை வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் ஆரியபவன் ரவி, வர்த்தக பிரிவு நகரத் தலைவர் பொன் பெருமாள், நாடார் பேரவை நிர்வாகிகள் சேர்மன் பட்டு ராஜா, தாமோதரன், சக்திவேல் நாடார், குருசாமி, சுடலைமணி, நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...