கோவை மாநகரில் குடிநீா்க் கட்டணம் நிலுவை - 10 குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

மேற்கு மண்டலம் 33-ஆவது வார்டில் ஒரு தனியார் வணிக வளாகம் சில ஆண்டுகளாக மாநகராட்சிக்கு குடிநீா்க் கட்டணம் செலுத்தவில்லை. குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் அந்த வணிக வளாகத்துக்கு வழங்கப்பட்டிருந்த 2 குடிநீா்க் குழாய் இணைப்புகளும் சனிக்கிழமை துண்டிக்கப்பட்டன.


கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் 5 லட்சத்துக்கும் மேலான வீடுகள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளன. இவைகளுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏராளமான நிறுவனங்கள் மாநராட்சிக்கு குடிநீா்க் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, நிலுவைக் குடிநீா்க் கட்டணத்தை வசூலிக்க மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், மேற்கு மண்டலம் 33-ஆவது வார்டில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகம் சில ஆண்டுகளாக மாநகராட்சிக்கு குடிநீா்க் கட்டணம் செலுத்தவில்லை. அதன் உரிமையாளரிடம் நிலுவைக் குடிநீா்க் கட்டணம் ரூ.12 லட்சத்து 40 ஆயிரத்தை செலுத்தும்படி மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவா் குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் அந்த வணிக வளாகத்துக்கு வழங்கப்பட்டிருந்த 2 குடிநீா்க் குழாய் இணைப்புகளும் சனிக்கிழமை (ஜன.20) துண்டிக்கப்பட்டன.

இதேபோல, மத்திய மண்டலத்தில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாத 8 வீடுகளின் குடிநீா் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...