கோவைப்புதூரில் புதிய இந்தியன் வங்கி கிளை துவக்கம்

இந்தியன் வங்கியின் இந்தியாவில் 2655-வது கிளையும், கோவை மண்டலத்தில் 88-வது கிளையுமாக புதிய இந்தின் வங்கிக் கிளையினை கோவைப்புதூரில் இன்று கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.



இதில் இவ்வங்கியின் மண்டல மேலாளர் ஏ.கணேசராமன், துணை மண்டல மேலாளர் பி.ஜேம்ஸ் தாமஸ், கிளை மேலாளர் ஆர்.அபிநவ் சந்தர், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி கி.சுந்தரராமன், பொதுமேளாலர் லெட்சுமிபதி மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இதில் மண்டல மேலாளர் ஏ.கணேசராமன் பேசுகையில், வங்கிகள் வளர அதன் நம்பகத்தன்மை, சேவை செய்யும் முறை மிகவும் முக்கியமாகும். பராம்பரியமான வங்கிகள் இன்றும் மக்கள் மத்தியில் உள்ளது.

கோவை மண்டலத்தில் இந்தியன் வங்கி 3000 கோடிகள் வர்த்தகம் ரீடையில் துறையில் நடைபெற்று வருகிறது. அதேபோன்று விவசாயத்துறையில் 700 கோடி வரை வர்த்தகம் இந்தியன் வங்கியில் இம்மண்டலத்தில் நடைபெற்று வருகிறது.

இம்மண்டலத்தில் டெக்ஸ்டைல் துறை வர்த்தக பரிமாற்றத்தில் குறிப்பிடும்படியாக உள்ளது. ஆனால் விவசாயத்துறை மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. குறிப்பாக ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விவசாய வர்த்தகம் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் இதனை உயர்த்த இந்தியன் வங்கி செயல்பட முனைப்புடன் உள்ளது. மேலும் இம்மண்டலத்தில் இவ்வங்கி கோழிப்பண்னை வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்த உள்ளது.

ரியல் எஸ்டேட் துறை மிகவும் குறைந்து வங்கி வர்த்தக பரிமாற்றதில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. கோவைப்புதூர் கோவையில் வளர்ந்து வரும் பகுதியாக திகழ்கிறது. அதனால் இங்கு இப்புதிய கிளையினை தொடங்கியுள்ளோம் எனக் கூறினார்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...