துடியலூர் அருகே சமத்துவ பொங்கல் கொண்டாடிய ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள்

புதுப்பானையில் பொங்கல் வைத்தும், அம்மி அரைத்தும், கயிறு இழுத்தும், உரி அடித்தும், சிலம்பம் சுற்றியும், பறை இசைத்தும், கல்லூரி மாணவ, மாணவிகள் பொங்கல் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுடன் இணைந்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.



கல்லூரி வளாகத்தில் வண்ணக்கோலமிட்டு, முளைப்பாரி வைத்து, புதுப்பானையில் பச்சரிசியிட்டு அது பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு பொங்கல் வைத்து இறைவனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.



மேலும் பசு மாட்டிற்கு கற்பூரம் காட்டி பழம் வழங்கினர்.



தொடர்ந்து பாரம்பரிய உடையில் வந்திருந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இதில் மாணவிகள் அம்மி அரைத்தும், ஆசிரியைகள் மாணவிகள் பங்கேற்ற கயிறு இழுக்கும் போட்டிகள், உரியடித்தல், சிலம்பம், மெதுவாக சைக்கிள் ஒட்டுதல், பறை இசைத்தல் எனபல்வேறு போட்டிகள் நடத்தியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் சினிமா பாடல்களுக்கு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...