தனிநபரின் அராஜங்கத்தை கண்டித்து பல்லடம் அருகே அருள்புரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் தர்ணா போராட்டம்

சிவகணேஷ் என்பவர் தனது இரண்டு ஆட்டோக்களை தண்ணீர் பந்தல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதாக ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தண்ணீர் பந்தல் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் கடந்த 24 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் பொது நல சங்கம் என்ற பெயரில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

இங்கு சுமார் 20 ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ள நிலையில், அதே பகுதியில் சிவகணேஷ் என்பவர் தனது இரண்டு ஆட்டோக்களை தண்ணீர் பந்தல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதாகவும், இதனால் 20 ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், சங்கத்தின் சார்பில் பல்லடம் காவல் நிலையத்திலும், ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் அளித்திருந்தனர்.



ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் சிவ கணேஷ் என்பவர் தொடர்ச்சியாக வாகனத்தை நிறுத்துவதை கண்டித்து, இன்று தண்ணீர் பந்தல் பேருந்து நிறுத்தத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களை நிறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், சிவ கணேஷ் என்ற தனிநபரின் அராஜகப் போக்கால் 20 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அவரது வாகனத்தை அப்புறப்படுத்தினால் மட்டுமே தர்ணா போராட்டத்தை கைவிட போவதாக தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...