கள்ளுக்கடைக்கு அரசு அனுமதிக்க வேண்டும் - பொள்ளாச்சியில் ER.ஈஸ்வரன் பேட்டி

பீக் அவர்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் 24 மணிநேரம் இயங்கும் தொழிற்சாலைகள் சோதனையான காலகட்டத்தை சந்தித்து வருகிறது. எனவே தமிழக அரசு நிலைக்கட்டணம், பீக் அவர்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ER ஈஸ்வரன் கேட்டுக்கொண்டார்.


கோவை: கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டை வீதியில் உள்ள தீரன் சின்னமலை அரங்கில் மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ER ஈஸ்வரன் கலந்து கொண்டார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, தமிழகத்தில் அரசு மதுபான கடைகளை முழுமையாக மூட வேண்டும், கள் மதுபான பொருள் அல்ல, மற்ற மாநிலங்களை போல விவசாயிகள் நலன் கருதி கள் இறக்க அனுமதி வழங்கி மதுக்கடைகளை தமிழக அரசு மூட வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர், கொள்முதல் விலையை ஏற்றுவது போல் ஏற்றுகிறார்கள், ஆனால் தேவை அதிகரிக்கிறது, மற்ற மாநிலங்களில் இருந்து தமிழத்தில் பால் அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர், ஆவின் ஏன் வாங்க முடியாது பால் கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தி வழங்க வேண்டும், தமிழகத்தில் மின்கட்டணம் மற்றும் நிலை கட்டணம் உயர்வால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், பீக் அவர்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் 24 மணிநேரம் இயங்கும் தொழிற்சாலைகள் சோதனையான காலகட்டத்தை சந்தித்து வருகிறது, எனவே தமிழக அரசு நிலைக்கட்டணம், பீக் அவர்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...