நஞ்சியம்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற ஆண் மான் பலி

ஊதியூர் மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் வறண்டு கிடக்கிறது. இதனால், தண்ணீர் மற்றும் உணவு தேவைக்காக வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகிறது. அவ்வாறு கூட்டம், கூட்டமாக சாலையை கடக்க முயலும் மான்கள் சில சமயங்களில் வாகனத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது நஞ்சியம்பாளையம். ஊதியூர் மலைப்பகுதியில் காடுகள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் ஊதியூர் மலையில் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் ஊதியூர் மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் வறண்டு கிடக்கிறது. இதனால், தண்ணீர் மற்றும் உணவு தேவைக்காக வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகிறது. அவ்வாறு மான்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து வந்து கொண்டுள்ளது.



மேலும் தற்போது தாராபுரம் அருகில் நஞ்சியம்பாளையம் என்ற இடத்தில் தண்ணீர் தேவைக்காகவும், உணவு தேவைக்காகவும் காடுகளில் மேய்ந்து கொண்டு இருந்த மான்கள் சாலையை கடக்கும் போது, மூன்று மான்களில் ஒரு மான் மட்டும் எதிர்பாராதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.



இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கூறுகையில் இந்த பலியான மானுக்கு இரண்டு வயது இருக்கும், எனவும் இது ஆன் மான் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...