இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பள்ளி செல்லா குழந்தைகளை அடையாளம் காண்பது, உயர்கல்வி வழிகாட்டுதல், இல்லம் தேடிக் கல்வியின் முக்கியத்துவம், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை சிறப்பாக எழுத பெற்றோர்கள் வழிகாட்டுதல், போதைப் பொருள்களை பயன்படுத்தாமல் தடுத்தல் ஆகியவை குறித்து பள்ளி மேலாண்மை கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.


திருப்பூர்: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி வருடத்தின் முதல் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது.



அதன் அடிப்படையில் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார்‌. பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் பிரியங்கா முன்னிலை வைத்தார்.

கூட்டத்தில் வருகின்ற ஜனவரி 8 முதல் 10ஆம் தேதி வரை பள்ளி வளாகத்தை தூய்மை செய்து பள்ளி வளாகம் மிளிரும் பள்ளியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது சார்பாக கலந்துரையாடப்பட்டது.



பள்ளி செல்லா குழந்தைகளை அடையாளம் காண்பது, உயர்கல்வி வழிகாட்டுதல், இல்லம் தேடிக் கல்வியின் முக்கியத்துவம், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை சிறப்பாக எழுத பெற்றோர்கள் வழிகாட்டுதல், போதைப் பொருள்களை பயன்படுத்தாமல் தடுத்தல், அது சார்ந்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் போன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

அதேபோல பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வருகை தரும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வேறொரு நாளில் பணி வழங்குதல் குறித்த அரசாணைகள் ஆகியவற்றை பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் எடுத்துரைத்தார். தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு கூட்டம் குறித்த காணொளிகள் திரையிடப்பட்டன. நிறைவாக இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர் கோகுல பிரியா நன்றி கூறினார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...