இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பள்ளி செல்லா குழந்தைகளை அடையாளம் காண்பது, உயர்கல்வி வழிகாட்டுதல், இல்லம் தேடிக் கல்வியின் முக்கியத்துவம், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை சிறப்பாக எழுத பெற்றோர்கள் வழிகாட்டுதல், போதைப் பொருள்களை பயன்படுத்தாமல் தடுத்தல் ஆகியவை குறித்து பள்ளி மேலாண்மை கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.


திருப்பூர்: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி வருடத்தின் முதல் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது.



அதன் அடிப்படையில் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார்‌. பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் பிரியங்கா முன்னிலை வைத்தார்.

கூட்டத்தில் வருகின்ற ஜனவரி 8 முதல் 10ஆம் தேதி வரை பள்ளி வளாகத்தை தூய்மை செய்து பள்ளி வளாகம் மிளிரும் பள்ளியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது சார்பாக கலந்துரையாடப்பட்டது.



பள்ளி செல்லா குழந்தைகளை அடையாளம் காண்பது, உயர்கல்வி வழிகாட்டுதல், இல்லம் தேடிக் கல்வியின் முக்கியத்துவம், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை சிறப்பாக எழுத பெற்றோர்கள் வழிகாட்டுதல், போதைப் பொருள்களை பயன்படுத்தாமல் தடுத்தல், அது சார்ந்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் போன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

அதேபோல பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வருகை தரும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வேறொரு நாளில் பணி வழங்குதல் குறித்த அரசாணைகள் ஆகியவற்றை பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் எடுத்துரைத்தார். தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு கூட்டம் குறித்த காணொளிகள் திரையிடப்பட்டன. நிறைவாக இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர் கோகுல பிரியா நன்றி கூறினார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...