உடுமலை அருகே மதுபான கடை அமைக்க எதிர்ப்பு - குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

புதிய மதுக்கடை அமைத்தால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படக்கூடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு மதுபான கடையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். இல்லை என்றால் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் உள்ள பொள்ளாச்சி சாலையில் தனியார் இடத்தில் அதிநவீன குளிர்சாதன மதுபான கூடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பெதம்பட்டியில் நால்ரோடு பகுதி சுற்றுவட்டார 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக உள்ளது.



மேலும் இப்பகுதியில் பள்ளிகள், கோவில்கள், வணிக நிறுவனங்கள், பொள்ளாச்சி தாராபுரம் தேசிய நெடுச்சாலை அமைந்துள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் உள்ள அரசு மதுக்கடைகளால் பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.



தற்பொழுது மீண்டும் கூடுதலாக அரசு மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சார்பில் குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டார வளர்ச்சி துறை அதிகாரியிடம் மனு வழங்கினர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடமாகும். இப்பகுதியில் அரசு மதுபான கடை இருந்தால் விபத்துக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படக்கூடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு மதுபான கடையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் இல்லை என்றால் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...