மூலனூரில் அரசுப்பள்ளி மற்றும் கோவில் புனரமைக்கப்பட்டு அரசிடம் ஒப்படைப்பு

அரசு பள்ளியையும், கோவிலையும் சிறப்பாக புனரமைப்பு பணிகளை செய்து கொடுத்த ஆறுமுகம் அறக்கட்டளை அனிதா டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் குலும்பு இயக்குனர்களுக்கு அமைச்சர் கயல்விழி நன்றி தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த மூலனூர் உள்ள ஓலபாளையம் அரசு பள்ளி மற்றும் குல மாணிக்க ஈஸ்வரன் கோவில் புனரமைக்க பட்டு அரசு நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் விழா மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஓலபாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அருள்மிகு குல மாணிக்க ஈஸ்வரன் கோவில் புனரமைக்கும் பணி ஆறுமுகம் அறக்கட்டளை சார்பில் அனிதா டெக்ஸ்டைல் பிரைவேட் நிறுவனம் 35, லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

அரசு பள்ளி மற்றும் கோவில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று அரசு நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் விழா திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில், நடைபெற்றது.

இந்நிகழ்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மற்றும் திருப்பூர் மாநகராட்சி நாலாவது மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி கூறுகையில், மக்கள் நலத்திட்ட பணிகள் அனைத்தையும் அரசு மட்டும் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. அனிதா டெக்ஸ்டைல் நிறுவனங்களைப் போன்று தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இணைந்து இதுபோன்ற மக்கள் நலத்திட்ட பணிகளை மேற்கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.



இதுபோன்ற மக்கள் நலத்தட்ட பணிகளை அரசுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்களும் முன் வருவதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டாக அமையும்.

அரசு பள்ளியையும், கோவிலையும் சிறப்பாக புனரமைப்பு பணிகளை செய்து கொடுத்த ஆறுமுகம் அறக்கட்டளை அனிதா டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் குலும்பு இயக்குனர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...