இருட்டறையில் அடைத்து மாணவன் சித்தரவதை- பிரபல நேரு கல்வி குழுமத்தின் தலைவர் கைது


நேரு கல்வி குழும கல்லூரி வாளாகத்தில் இருட்டறையில் அடைத்து வைத்து எட்டு நாட்கள் மாணவனை சித்தரவதை செய்ததாக நேரு கல்விக்குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் கேரள மாநிலம் திருச்சூரில் கைது செய்யப்பட்டார்.

கோவையில் பிரபல நேரு கல்விக்குழுமம் இயங்கி வருகிறது. ஏரோநாட்டிக்கல், டெக்னாலஜி, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு  பிரிவுகளில் இக்குழுமத்தின் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. 

இதேபோல கேரள மாநிலத்திலும் இந்த குழுமத்தின் சார்பில் கல்லூரிகள் இயங்கிவருகிறது. இந்த கல்விக்குழுமத்தின் தலைவராக கிருஷ்ணதாஸ் உள்ளார். இந்த கல்விக் குழுமத்திற்கு சொந்தமான கல்லூரிகளில் மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் பாம்பாட்டி என்கிற பகுதியில் நேரு அகாடமி சட்டக்கல்லூரியில் கடந்த ஜனவரி மாதம் விஷ்ணுபினராய் என்கிற மாணவனை கல்லூரி நிர்வாகம் சித்தரவதை செய்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதே கல்லூரியில் பயின்று வந்த திருச்சூர் எருமப்பட்டியை சேர்ந்த சக்கீர் சவுகத் என்கிற மாணவனை கல்லூரி வளாகத்தில் உள்ள இருட்டறையில் எட்டு நாட்களுக்கு மேலாக அடைத்துவைத்து சித்தரவதை செய்துள்ளனர்.

இதனையடுத்து தப்பி வந்த மாணவனின் புகாரின் பேரில் நேரு கல்விக்குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் மற்றும் கல்லூரி சட்ட ஆலோசகர் சுசித்திரா, வல்சன்குமார் மற்றும் பேராசிரியர் சுகுமார் ஆகியோரை திருச்சூர் எருமப்பட்டி காவல்துறையினர் கைதுசெய்தனர்.

கோவையில் பிரபலமாக செயல்பட்டு வரும நேரு கல்விக்குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...