பாப்பம்பட்டியில் இருந்த டாஸ்மாக் கடையினை இடையர்பாளையம் பகுதிக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து ஆட்சியரிடம் மனு

பாப்பம்பட்டியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையினை இடையர்பாளையம் பகுதிக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், சூலூர் வட்டம், பாப்பம்பட்டி கிராமத்தில் தற்பொழுது பல்லடம் முதல் கொச்சின் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை நீதிமன்ற உத்தரவுப்படி வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் தற்பொழுது இந்த மதுபான கடையை பாப்பம்பட்டி முதல் இடையர்பாளையம் சாலையில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த இடத்தின் அருகில் விவசாய தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்டவை உள்ளதால் டாஸ்மாக் கடை அமைப்பதன் மூலம் அப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெரும் சிரமம் ஏற்படும். 

மேலும், இப்பகுதி முக்கியசாலையில் உள்ள அபாய வளைவு பகுதியாகும். மேலும், இங்கு மதுபான கடை அமைத்தால் விபத்துகள் அதிகரிக்கும்.

எனவே கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு இடையர்பாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதை தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...