மனக்கடவு அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர் கயல்விழி அஞ்சலி

ஆலங்காட்டு பிரிவு என்ற இடத்தில் நேற்று மாலை பெட்ரோல் டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தமிழ்மணி, சித்ரா, கலாராணி, செல்வராணி, பாலகிருஷ்ணன், ஆகிய ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த மனக்கடவு அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் உடல்களுக்கு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மனக்கடவு ஆலங்காட்டு பிரிவு என்ற இடத்தில் நேற்று மாலை பெட்ரோல் டேங்கர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தமிழ்மணி, சித்ரா, கலாராணி, செல்வராணி, பாலகிருஷ்ணன், ஆகிய ஐந்து பேரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.



அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது பிரேத பரிசோதனை முடிவடைந்த பிறகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டது.



இறந்தவர்களின் உறவினர்களுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உயிர் இழந்தவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...