கோவை அருகே ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை - ஊழியருக்கு பொதுமக்கள் பாராட்டு

ஆம்புலன்ஸில் வரும் வழியில் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் சோதிக்கப்பட்ட நிலையில் தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை அருகே பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயேகுழந்தை பிறந்த நிலையில் ஊழியருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கோவைநல்லாம்பாளையம் ரோடு, ரத்தினபுரியை சேர்ந்தவர் பழனிமுருகன்.இவரது மனைவி மம்தா( 29. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்வதற்காக, 108 ஆம்புலன்ஸை அழைத்தனர். அங்கு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மம்தாவை அழைத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு வந்தனர். மம்தாவுக்கு பிரசவ வலி அதிகரித்ததால், அவரை ஆம்புலன்ஸ் தொழில்நுட்ப ஊழியர் கோபாலகிருஷ்ணன் பரிசோதித்தார்.

குழந்தையின் தலை வெளியில் வந்தது தெரிந்தது.இதனால் வேறு வழியின்றி அவர், பிரசவம் பார்த்தார். இதில் மம்தாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மம்தாவை, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தாய் மற்றும் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். அவசரகாலத்தில் விரைந்து செயல்பட்டஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...