பாப்பம்பட்டி பகுதியில் நிலவிவரும் குடிநீர் மற்றும் சப்பைத்தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பாப்பம்பட்டி பகுதியில் நிலவிவரும் கடுமையான குடிநீர் மற்றும் சப்பைத்தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி பாப்பம்பட்டி தி மு க ஒன்றிய துணை செயலாளர் பி.ஆர்.பரமசிவம், இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- 

பாப்பம்பட்டி ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு என பில்லூர் குடிநீர் 1 லட்சத்து 65 லிட்டர் ஒதுக்கீடு செய்து உள்ளனர். அனால் கடந்த மூன்று வருடகாலமாக சுமார் 80 ஆயிரம் லிட்டர் குடிநீர் மட்டுமே இப்பகுதி மக்களுக்கு கிடைத்து வந்தது.

இதனால் 17 நாட்களுக்கு ஒருமுறை 1/2 மணி நேரம் மட்டும் ஒரு குடும்பத்திற்கு பத்து குடம் குடிநீர் கிடைத்து வந்தது. இந்த குடிநீர் பற்றாக்குறையினால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், மழை இல்லாத காரணத்தினால் எங்கள் பகுதியில் 7 போர்வெல்களில் கிடைத்து வந்த சப்பை தண்ணீரும் இப்பொது கிடைப்பது இல்லை.

இந்த கடுமையான குடிநீர் பிரச்சனையை தீர்க்க போதுமான பில்லூர் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் தற்காலிகமாக லாரிகள் மூலம் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...