போலீசாரின் அச்சுறுத்தல் காரணமாகவே சதாம் உசேன் நீதிமன்றத்தில் சரணடைந்தார் பரூக் கொலை வழக்கில் வக்கீல் பேட்டி


பாரூக் கொலை வழக்கில் அன்சார்த் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், இன்று சதாம் உசேன் என்ற ஒரு நபர் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 5ல் சரணடைந்தார்.

இந்த நிலையில், பாரூக் கொலையில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதை கூறவே நீதிமன்றத்தில் சதாம் உசேன் சரணடைந்துள்ளதாக அவரது வக்கீல் ஜக்கிரியா தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

பாரூக் கொலை வழக்கில் 6 பேர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிப்பதாக கூறினர். ஆனால், அதற்கு எவ்வித ஆதாரமும் போலீசாரிடம் இல்லை. இந்த கொலையில் போத்தனூர் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (28) என்பவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிப்பதோடு தினமும் அவரது வீட்டிற்கு சென்று மனரீதியாக பாதிப்படைய செய்கின்றனர். 

இந்த கொலைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதற்காகவே சதாம் உசேன் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 

மேலும், சிலர் இன்றோ அல்லது நாளையோ நீதிமன்றத்தில் சரணடைவார்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...