தாராபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நகராட்சி தலைவர் ஆய்வு

மழை நீர் வடிகால் அமைத்தல், நகராட்சி பகுதியில் பழுதடைந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவற்றை பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகளை நகராட்சி தலைவர் பாபு கண்ணன் ஆய்வு செய்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி பகுதியில் 19 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை பணிகளான சாக்கடைகள் பராமரிப்பு, குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை நகராட்சி தலைவர் பாபு கண்ணன் ஆய்வு செய்தார்.



இதனை தொடர்ந்து சீதா நகர் சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் போலீஸ் நிலைய வீதி ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் புதிதாக அமைத்தல் நகராட்சி பகுதியில் பழுதடைந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவற்றை பழுது நீக்குதல் செய்யப்பட பணிகளையும் ஆய்வு செய்தார்.



இதனை தொடர்ந்து 26, 27 ஆகிய பகுதிகளில் சமுதாய கழிப்பிடமும் பராமரிப்பு பணிகள் மற்றும் மழைநீர் வடிகால், சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.



இதில் திமுக நகரச் செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு, நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...