இந்தியாவிலேயே முதல்முறையாக கதிர்நாயக்கன்பாளையத்தில் நவீன துப்பாக்கி சுடும் பயிற்சி

ஐந்து மாநில தேர்தலில் உள்ளூர் காவலர்களுடன் இணைந்து சி.ஆர்.பி.எப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், இதற்காக தனியாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் சி.ஆர்.பி.எப் தலைவர் மற்றும் இயக்குனர் சுஜய் லால் தோசன் தெரிவித்துள்ளார்.


கோவை: இந்தியாவிலேயே முதல் முறையாக கோவை துடியலூர் அருகே கதிர்நாயக்கன்பாளையத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தில் குறைந்த செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தினை சி.ஆர்.பி.எப். தலைவர் மற்றும் இயக்குநர் சுஜய் லால் தோசென் திறந்து வைத்தார்.

கோவை துடியாலூரை அடுத்த கதிர்நாயக்கன்பாளையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு இந்தியா முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சி.ஆர்.பி.எப். காவலர் முதல் சப் இன்ஸ்பெக்டர் வரை வீரர்களுக்கு பயிற்ச்சி கொடுக்கப்படுகிறது.



இந்த நிலையில் தற்போது இந்த வளாகத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தில் குறைந்த செலவில் நவீன துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தினை சி.ஆர்.பி.எப் கல்லூரி முதல்வர் அஜய் பரதன், சென்னை ரேஞ்ச் டி.ஐ.ஜி.அருள்குமார் ஆகியோர் மேற்பார்வையில் உருவாக்கியுள்ளனர்.



இதனை சி.ஆ.பி.எப் தலைவர் மற்றும் இயக்குனர் சுஜய் லால் தோசன் துவக்கி வைத்தார்.



அப்போது ஆண் மற்றும் பெண் வீரர்கள் குறி பார்த்து துப்பக்கியால் சுட்டு சாகசம் செய்தனர்.



தொடர்ந்து துப்பாக்கு சுடும் தளத்தை பார்வையிட்டு வீரர்களுக்கு இயக்குநர் வாழ்த்து தெரிவித்தார்.



தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர்.பி.ஆப். இயக்குநர் சுஜய் லால் தோசன் இந்தியாவில் உள்ள பயிற்சி கல்லூரிகளில் நவீன கட்டமைப்பு இங்கு தான் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திற்கும் எடுத்து சென்று அமைக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்துறை அம்சங்களைக் கொண்ட இந்த துப்பாக்கிச் சுடும் தளம் இப்போது இருக்கும் பயிற்சியாளர்களின் திறமையான துப்பாக்கிச் சுடும் நடைமுறைகளுக்கும். அதன் பணியாளர்களின் துப்பாக்கி சுடும் திறன்களை கூர்மைப்படுத்துவதற்கும் பயன்படும் என்றார்.

மேலும் நடைபெறும் ஐந்து மாநில தேர்தலில் உள்ளூர் காவலர்களுடன் இணைந்து எங்கள் சி.ஆர்.பி.எப். வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதற்காக தனியாக சி.ஆர்.பி.எப். வீரர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பகுதியில் தற்ப்போது தீவிரவாதம் கட்டுபடுத்தப்பட்டுள்ளது. ட்ரோன் கேமரா மூலம் தீவிரவாதிகளின் முகாமை கண்காணித்து அழிக்கப்டுகிறது என்று கூறினார். இவ்விழாவில் CRPF மற்றும் மாநில காவல்துறை / மாவட்ட நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...