தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பெண்களிடம் அத்து மீறுபவர்களை கண்காணிக்க தனிப்படை

தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிப்பதற்காக மாநகர காவல் துறை சார்பில் உயர் கோபுரங்கள் அமைத்து தொலைநோக்கிகள் மூலம் கூட்டத்தை கண்காணிப்பதாகவும், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்று வருவதாகவும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் முக்கிய கடைவீதி பகுதியான ஒப்பணக்கார வீதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பூத்தாடைகளை வாங்கி வருகின்றனர். ஏராளமானோர் குவிந்து வருவதால் அப்பகுதியில் மாநகர காவல் துறையினர், ஊர்காவல் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இதனிடையே அப்பகுதியில் கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை ஆய்வு செய்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் போலீசாருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,



தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிப்பதற்காக மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உயர் கோபுரங்கள் அமைத்து தொலைநோக்கிகள் மூலம் கூட்டத்தை கண்காணிப்பதாகவும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே வழிப்பறி பிக்பாக்கெட் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களின் புகைப்படங்களை ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கேமரா பதிவுகளுடன் ஒப்பிட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூட்ட நெரிசல் இருக்கக்கூடிய கடைவீதி பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் தலா மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் அத்து மீறுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக முழுவதும் பெண் காவலர்கள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார். இதேபோல் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த சூழலில் இந்த ஆண்டும் அது போன்ற சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையின் உளவு பிரிவு, நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எந்த விதத்திலும் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கும் வகையில் கோவை மாநகர காவல்துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...