உடுமலை அருகே சாலையில் அடிபட்டு கிடந்த மயிலை காப்பாற்றிய நபருக்கு குவியும் பாராட்டு

பெரியபட்டி அருகே இறக்கை மற்றும் காலில் அடிபட்டு பறக்க முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மயிலை, வனத்துறையினர் விரைந்து வந்து மீட்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலத்தில் உணவகம் மற்றும் தண்ணீர் கேன் சப்ளை செய்துவருபவர் வெள்ளசெட்டிபாளையத்தை சார்ந்த கார்த்திகேயன்.

இவர் பல்லடம் சாலையில் பெரியபட்டி அருகே வந்து கொண்டிருந்த போது மயில் ஒன்று சாலை ஒரத்தில் இறக்கை மற்றும் காலில் அடிபட்டு பறக்க முடியாமல் வேதனையுடன் இருப்பதை கண்டு என்னசெய்வது என தெரியாமல் அதன் அருகிலேயே நீண்டநேரம் நாய்கள் கடித்திடாவாறு பாதுகாத்து நின்றார்.

அதன்பின் அங்கிருந்தவர்கள் உதவி இயக்குநர் கணேஸ்ராம் அவர்களுக்கு தகவல் கொடுக்க உடனடியாக செயல்பட்ட அவர் மயிலை மீட்க சம்பவ இடத்திற்கு வனத்துறையினரை அனுப்பினர்.

விரைந்து வந்த வனத்துறையினர் அடிபட்டு கிடந்த மயிலை மீட்டு சிகிச்சைகாக எடுத்து சென்றனர்.

அடிபட்டுகிடந்த மயிலுக்கு நாய் உள்ளிட்ட மிருகங்களால் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாத்து நின்ற கார்த்திகேயனுக்கும் தகவல் கிடைத்த உடன் விரைந்துவந்த மயிலை மீட்டு சிகிச்சை அளித்த வனத்துறையினர்க்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...