குண்டடம் பகுதியில் வாழை சாகுபடி - எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும் என எதிர்பார்ப்பு

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் நடப்பாண்டில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.


திருப்பூர்: பனிப்பொழிவு பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும் என குண்டடம் வாழை விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

குண்டடம் பகுதியில் நடப்பாண்டில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். நடப்பாண்டில் குண்டடம் பகுதியில் ருத்ரவாதி, குண்டடம், முத்துகவுண்டன்பாளையம், இடையப்பட்டி, தேர்பாதை, கெத்தல்ரேவ் உள்ளிட்ட கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ளனர்.

இது பற்றி விவசாயிகள் கூறியதாவது :- இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவில் வாழை சாகுபடி செய்துள்ளோம். நாட்டு நேந்திர ரக வாழை சாகுபடி செய்துள்ளோம். சாகுபடி செய்துள்ளோம். சாகுபடி செய்ய வாழை கிழங்கு, உரம், உழவு, ஆட்கள் கூலி என ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது.

வாழை வாழை கிழங்கு நடவு செய்து 1 வருடத்தில் வாழைதார் விற்பனைக்கு அறுவடை செய்யப்படுகிறது. தற்போது வாழை தார் கிலோ ரூ.25 வரை விற்பனையாகி வருகிறது. நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 20 டன் முதல் 25 டன் வரை மகசூல் கிடைக்கும்.

இந்த ஆண்டு செடிகளில் நல்ல முறையில் காய்கள் பிடித்துள்ளதால் பனிபொழிவின் பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. இதே போல் நல்ல விலை கிடைக்குமானால் நல்ல லாபம் கிடைக்கும் என்றார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...