தாராபுரம் அரசு கலைக்கல்லூரி பைந்தமிழ் மன்றம் தொடக்க விழா - ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்துறையின் சார்பாக பகுத்தறிவு பைந்தமிழ் மன்ற தொடக்க விழா கல்லூரியின் தமிழ் துறையில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் பத்மாவதி தலைமையேற்று தமிழ் உரை வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழ் மன்ற தொடக்க விழா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழ் மன்ற தொடக்க விழா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்துறையின் சார்பாக பகுத்தறிவு பைந்தமிழ் மன்ற தொடக்க விழா கல்லூரியின் தமிழ் துறையில் நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் பத்மாவதி தலைமையேற்று தமிழ் உரை வழங்கினார். விழாவில் என் ஜி பி கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் தங்க மணிகண்டன் பாரதியின் கவித்துவம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு முறையில் பாரதியின் கவி பாடல் வரிகள் காலத்தால் அழியாத ஓவியம் என்றும் இன்றைய திரைப்படப் பாடல்களின் கருத்துக்கள் பாரதியிடம் குவிந்து கிடக்கின்றன என்றும் பாரதி சமுதாயத்திற்கு கருத்துக்களை உதாரணத்துடன் தெளிவுபடுத்தினர். தமிழ்துறை தலைவர் முனைவர் சீதாராமன் வரவேற்புரை ஆற்றினர். தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக அறிமுகம் அறிமுக உரை வழங்கினார் கௌரவ விரிவுரையாளர் விழாவில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக கடந்த வாரம் நடைபெற்ற பேச்சு மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 3000 ரூபாயும் மூன்றாவது பரிசாக 2000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பேராசிரியர்கள், தமிழ் துறை மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...