ஸ்மார்ட் சிட்டியின் குப்பைத் தொட்டிகளா இவை?

விரைவில் ஸ்மார்ட் சிட்டியாகயாக உருவாக இருக்கும் கோவை மாநகரை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. குளங்களை மேம்படுத்துதல், சீமை கருவேல மரங்களை அகற்றுதல், மொபைல் டாய்லெட்டுகள், பாதாள சாக்கடைத் திட்டம் அமைத்தல் என பல்வேறு திடங்களை அடுக்கிகொண்டே போகலாம்.



ஆனால், கோவை மாநகரின் தெருக்களில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளைத் தான் கண்டு கொள்ள ஆள் இல்லை.



இன்று பல இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகள் உபயோகிக்க முடியாத நிலையில் கிடக்கின்றன. பல ஆண்டுகளாக மழை மற்றும் வெயிலில் காய்ந்ததால் துருப்பிடித்து உடைந்து காணப்படுகின்றன. உடைந்து போன குப்பை தொட்டிகளில் பொதுமக்கள் இடும் குப்பைகள் வீதிக்குள் வலம் வருகின்றன.



அவற்றுள் ஒரு எடுத்துக்காட்டே கோவை ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் இருந்து உப்பிலிபாளையம் செல்லும் வழியில் வகைப்பட்டுள்ள குப்பை தொட்டி.



எது குப்பை, எது குப்பைத் தொட்டி என கண்டறியவே முடியாதவாறு இந்த குப்பைத் தொட்டி படு மோசமான நிலையில் உள்ளது. அது மட்டுமின்றி, காமராசர் சாலை உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகளும் இதே நிலை தான் உள்ளன.

மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளிலும், குறைவான மக்கள் தொகை கொண்ட இடங்களிலும் ஒரே அளவிலான குப்பைத் தொட்டிதான் வைக்கப்படுகிறது. இந்த சூழலில் குப்பை தொட்டி நிறையும் போது, குப்பைகளை மக்கள் சாலை ஓரமாக போட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

மக்கள் மாற்றத்தை விரும்பி வரும் இந்த நேரத்தில் அரசும் இது போன்ற பிரச்சனைகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மாற்றம் அதிகாரிகளிடம் வர வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...