புதர் மண்டிக்கிடக்கும் கொழுமம் ரோடு ரயில்வே சுரங்கப் பாதை - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

உடுமலை அருகே உள்ள கொழுமம் ரோடு ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிநிற்கும் கழிவு நீர் மற்றும் மண்டிக்கிடக்கும் புதரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: ரயில்வே கேட்டு அருகில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை தற்போது புதர் மண்டி சூழ்ந்து காணப்படுவதால், அவசர தேவைகளுக்கு கூட ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொழுமம் ரோடு ரயில்வே கேட் பகுதியில் கொழுமம் குமரலிங்கம் ருத்ரபாளையம் பழனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில் ரயில்வே கேட்டு அருகில் ரயில்வே சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது.



ரயில் வரும் நேரங்களில் தாமதமானால் சுரங்கப்பாதை வழியாக வாகன ஓட்டிகள் செல்வதற்கு அமைக்கப்பட்ட நிலையில், தற்போது புதர் மண்டி சூழ்ந்து காணப்படுகின்றது.



இதனால் அவசர தேவைகளுக்கு ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை தற்போது உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...